திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி அதிகாரி ஆய்வு

திருத்துறைப்பூண்டி, ஜன.5: திருத்துறைப்பூண்டியில் நகர பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சீரமைக்கப்பட்ட புதிய தார்சாலைகளை திருச்சி தரக்கட்டுப்பாடு கோட்ட அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். திருத்துறைப்பூண்டி நகரில் தொடர் மழையால் சேதமடைந்த சாலை முழுவதும் நெடுஞ்சாலை சார்பில் புதிய தார்சாலையாக போடப்பட்டது. நகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார்சாலைகளின் தரம் குறித்து திருச்சி நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் சிவகுமார், உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியளர் ஹேமலதா ஆகியோர் ஆய்வு செய்தனர். திருவாரூர் கோட்ட பொறியாளர் சிவகுமார், உதவி கோட்ட பொறியாளர் ஜெயந்தி, இளநிலை பொறியாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: