சேந்தமங்கலம், பிப். 5: அண்ணா நினைவு தினத்தையொட்டி, சேந்தமங்கலம் ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலையில் துத்திக்குளம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல காளப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் பேரூர் செயலாளர் நடேசன் தலைமையில் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சேந்தமங்கலம் நகர திமுக சார்பில், செயலாளர் தனபாலன் தலைமையில் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்தநிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணி, பேளுக்குறிச்சி செயலாளர் நல்லுராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் மணிமாலா சின்னசாமி, துணைத்தலைவர் கீதா வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் குணசேகரன், அழகப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சரசு திராவிடமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.