பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே வீட்டில் இருந்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.கோயில் தெருவைச் சேர்ந்தவர் பச்சையம்மாள்(56). இவர் தனது மகன் ஜெகதீஷ் என்பவருடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறைக்குள் சென்ற பச்சையம்மாள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே .உயிரிழந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த அவரது மகன், தாய் தங்கியிருந்த அறையில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு எரிந்த நிலையில் தாய் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.