பெரம்பலூர், பிப்.4: இந்திய மருத்துவ சங்க பெரம்பலூர் கிளையின் சார்பாக கலப்பட மருத்துவ முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனை நுழைவு வாயிலில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கத்தின் பெரம்பலூர் கிளையின் தலைவர் டாக்டர் வல்லபன் தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் டாக்டர் ராஜாமுகமது, பொருளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் தங்கராஜ் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.