முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா. இவர் தனிக்கட்சி துவங்க தொடங்கி உசிலம்பட்டியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், உசிலம்பட்டி தொகுதியில், சசிகலா ஆதரவாளர் முன்னாள் தலைமைக் காவலருமான ஒச்சாத்தேவர் ஒட்டியுள்ள போஸ்டர்களில், ‘வீரமங்கை வி.கே.சசிகலா ஆதரவு பெற்ற வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வோம். உசிலம்பட்டி தொகுதியில் சசிகலா போட்டியின்றி வெற்றி பெறுவார்’ என கூறப்பட்டுள்ளது.
