ஊட்டி, பிப். 4: பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து ஆர்சி., காலனி வழியாக பட்பயர் செல்லும் சாலையோரங்களில் போடப்பட்டுள்ள மரங்களால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. ஊட்டி அருேகயுள்ள பட்பயர் பகுதிக்கு பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து ஆர்சி. காலனி வழியாக ஒரு சாலை செல்கிறது. இச்சாலையின் இரு புறங்களிலும் ராட்சத கற்பூர மரங்கள் உள்ளன. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையின் போது, காற்று வீசும் சமயங்களில் இந்த மரங்கள் விழுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த மழையின் போது, ஆர்சி. காலனி அருகேயுள்ள கற்பூர மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தது. இந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.