டெல்லி: ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை அதிரடி உயர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் தாக்கம்” என்ற தலைப்பில் ஏஐ மாநாடு டெல்லியில் பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் கோலோச்சும் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்பதால் மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது; புகழ்பெற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் வரும் நிலையில் நட்சத்திர ஓட்டலின் ஒரு நாள் அறை வாடகை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
