நெல்லை, பிப். 3: பாளை தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் தியாகராஜ சுவாமிகளின் 174வது ஆராதனை உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் சிலை, கருவறையில் இருந்து மகா மண்டபத்திற்கு எழுந்தருளலும், தொடர்ந்து ஆராதனை, பஞ்சரத்ன கீர்த்தனை, 16 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது.