கோவை: கே.ஜி. சாவடி பகுதியில் கடந்த 3ம் தேதி பொறியியல் கல்லூரி மாணவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 2 சவரன் தங்கச் செயின் பறித்த வழக்கில், பாஜக நிர்வாகி உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான விவேக் (36) பாஜகவின் பட்டியலினப் பிரிவின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
