மன்னார்குடி, ஜன.29: மன்னார்குடி தாலுக்கா மருந்து வணிகர்கள் சார்பில் தலைவர் பழனியப்பன், செயலாளர் சிற்றரசு, பொருளாளர் ஜெயபால் உள்ளிட்டோர் மன்னை தொகுதி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவை நேரில் சந்தித்து அவர் மூலம் முன்னாள் மத்திய அமை ச்சரும், மத்திய சென்னை தொகுதி எம்பியுமான தயாநிதி மாறனுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர். அந்த மனுவில், எங்கள் சங்கத்தில் தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் உறுப்பி னர்களும், அதனை சார்ந்து 45 லட்சம் பேரும், அகில இந்திய அளவில் சுமார் 8.50 லட்சம் உறுப்பினர்களும் அதனை சார்ந்து சுமார் 2 கோடி பேரும் மருந்து வணிகத்தை செய்து வருகிறோம்.கடந்த 2014 ம் ஆண்டு முதல் எங்கள் தொழிலை நசுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு ஆன்லைன் மருந்து வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர தொடர்ந்து முயற்சித்து வந்தது. தமிழக மற்றும் பிற மாநில எம்பிக்கள் துணையோடு நாங்கள் அதனை கடுமையாக எதிர்த்து வந்தோம்.