முட்டை விலை தொடர் உயர்வு

நாமக்கல்:நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த 2 நாட்களாக தலா 5 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நேற்று மேலும் 5 காசுகள் உயர்த்தி, என்இசிசி மண்டலத் தலைவர் சிங்கராஜ் விலை நிர்ணயம் செய்தார். அதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 510 காசுகளில் இருந்து 515 காசுகளாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் முட்டை பண்ணை கொள்முதல் விலையில் 15 காசுகள் உயர்ந்துள்ளது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதை பின்பற்றி நாமக்கல் மண்டலத்திலும் உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: