தீ விபத்தில் வைக்கோல் எரிந்து சாம்பல்

பொன்னமராவதி, ஜன. 28: பொன்னமராவதி அருகே உள்ள ஆதினிபட்டியை சேர்ந்தவர் சின்னையா அகிலாண்டம். இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் வயலில் விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்து வீட்டின் அருகே வைக்கோல் போர் வைத்துள்ளனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள், பொன்னமராவதி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பொன்னமராவதி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீப்பற்றி எரிந்த வைக்கோல் போரில் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

Related Stories: