நெல்லை : நெல்லை கவின் ஆணவ கொலை வழக்கு தொடர்பாக சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை (CCTV) பாதுகாத்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி விக்டோரியா கௌரி உத்தரவிட்டார். நெல்லையில் மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தங்கள் மீதான சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என கைதான சரவணன், ஜெயபால் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்தனர்.
