சேலத்தில் 14 பேருக்கு கொரோனா

சேலம், ஜன.28: சேலத்தில் நேற்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 32,347 ஆகவும், டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 31,742 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 465ஆகவும் உள்ளது. இதேபோல், நாமக்கல்லில் 14 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 4 பேருக்கும், தர்மபுரியில் 5 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: