பெரம்பலூர்,ஜன.27: பெரம்பலூரில் 72-வது குடியரசு தினத்தினை முன்னிட்டு கலெக்டர் வெங்கட பிரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 72 வது குடியரசுதின விழா நேற்று நடைபெற்றது. எஸ்பி நிஷா பார்த்திபன், டிஆர்ஓ ராஜேந்திரன், சப்-கலெக்டர் பத்மஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட கலெக்டர் வெ ங்கடபிரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்புப் பணியில் சிறப்பாக செயல் பட்ட 74 அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றி தழ்களும், சிறப்பாகப் பணிபுரிந்தமைக்காக 23 போலீசாருக்கு தமிழக முதலமை ச்சர் பதக்கங்களையும் வழங்கி சிறப்பித்தார். விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லோகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சக்திவேல், முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொ ண்டனர்.