சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சாயல்குடி, ஜன.27:   தை மாத சிறப்பு பிரதோஷத்தை முன்னிட்டு திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயிலுள்ள நந்திதேவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. சாயல்குடி அருகே மாரியூர் பவள நிறவள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர், மேலக்கிடாரம் சிவகாமி அம்பாள் உடனுரை திருவனந்தீஸ் வரமுடையார், சாயல்குடி மீனாட்சியம்மன் உடனுரை கைலாசநாதர், டி.எம். கோட்டை கருணாகடாச்சி உடனுரை செஞ்சிடைநாதர், மங்களம் ரேனுகாம்பாள் உடனுரை ஆதிசிவன் ஆகிய கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள், விஷேச பூஜைகள் நடந்தது. கோயில்களிலுள்ள நந்திதேவருக்கு பல வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

Related Stories: