திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் லேப்டாப் கேட்டு மாணவிகள் திடீர் தர்ணா

திருச்சி, ஜன.26: இலவச லேப்டாப் கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழக அரசு சார்பில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. கடந்த 2017-18ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கவில்லை. இதை கண்டித்தும், லேப்டாப் வழங்கக்கோரியும் விடுபட்ட மாணவ, மாணவியர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் லேப்டாப் பெறாத 40க்கும் மேற்பட்ட மாணவியர் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் சார்பில் 10 மாணவ, மாணவியர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், உள்ளே சென்ற மாணவ, மாணவிகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் அவர்களுக்காக வெளியே காத்திருந்த மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Related Stories: