மன்னார்குடி, ஜன. 26: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக மாணவர்களின் நலன்கருதி அவரவர் படிக்கின்ற பள்ளியிலே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் விடுத்துள்ள அறிக்கை: கொரொனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு நடைமுறைகளுடன் 9 மாதங்களுக்கு பிறகு பொதுத்தேர்வை எழுதவுள்ள 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரிடை பயிற்சி அவசியம் என்பதையறிந்து தமிழக அரசு கடந்த 19ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது த் தேர்வு நடத்துவதற்கு ஏதுவாக மாணவர்களுக்கு தேர்வு எண் ஒதுக்குவதற்கான நடவடிக்கை மாணவர்களின் பட்டியல் தேர்வுத்துறையால் கேட்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன்கருதி கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடி க்கையால் கல்விச் செயல் பாடுகளின் பாதிப்பை அறிந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வினா வங்கி புத்தகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைககள் அரசு மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது.