பெரம்பலூர், ஜன.26: பெரம்பலூர் மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் 97மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி, மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வெங்கட பிரியா அறிவுரையின்படி, அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று (25ம் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, ஆதரவற்ற விவ சாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, பட்டா கோருதல், பட்டா மாறுதல், கல்விக்க டன் கோருதல், இலவச தை யல் இயந்திரம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு தரப்பு கோரிக்கை மனுக்கள் பெற ப்பட்டன.