நாகை, ஜன. 26: தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையை செப்பனிடக்கோரி சிக்கல் பகுதியில் மறியல் போராட்டம் நடத்திய எம்எல்ஏ தமிமுன் அன்சாரி உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை முதல் நாகை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மழையால் சேதமடைந்து கடந்த 3 மாதங்களாக பல விபத்துகளை சந்தித்து வருகிறது. இதுகுறித்து நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, தஞ்சையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசியும் நடவடிக்கை இல்லை. மேலும் நாகை ரயிலடி முதல் ஆழியூர் வரை நாகை தொகுதியில் அந்த சாலை மிக மோசமாக உள்ளது. அதேபோல் நாகை கோட்டை வாசல்படி முதல் மின்சார வாரிய துணை மின் நிலையம் அருகே சாலை சேதமடைந்து காணப்படுகிறது.