உத்தமபாளையம், ஜன.26: உத்தமபாளையம் பகுதியில் அம்மா சிமென்ட் கிடைக்காமல் கட்டிட வேலைகளை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. உத்தமபாளையத்தில், அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாலுகா அளவில். உத்தமபாளையம். உ.அம்மாபட்டி, ராமசாமி நாயக்கன்பட்டி, கோகிலாபுரம் உள்ளிட்ட பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள், வீடுகள் கட்டும் போது மானிய விலையில் அம்மா சிமென்ட் வாங்கி செல்கின்றனர். இந்த சிமென்ட் ஒரு மூடை ரூ.216 என விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 3 மாதமாக நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, மானிய விலையில், வரக்கூடிய அம்மா சிமென்ட் வருவதில்லை.