காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருப்புத்தூர், ஜன.26: திருப்புத்தூர் அருகே கோட்டையிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பங்குடி அய்யனார், ஸ்ரீ கோச்சடை காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று காலை நான்காம் கால வேள்வி ஆரம்பமாகி பூஜை நடந்தது. தொடர்ந்து யாகம் செய்யப்பட்ட புனிதநீர் எடுத்துச்செல்லப்பட்டு காலை 9.45 மணியளவில் ஸ்ரீகும்பங்குடிஅய்யனார், ஸ்ரீகோச்சடை காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்ற மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகாபிஷேகம், சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.

Related Stories: