வெய்க்காலிபட்டி கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

கடையம், ஜன. 26: கடையம்  அருகே வெய்க்காலிபட்டியில் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி, புனித  ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சார்பில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.  கல்லூரிச் செயலாளர் சேவியர் டெரன்ஸ் தலைமை வகித்தார். கடையம் ஆர்ஐ பாலமுருகன் சிறப்புரையாற்றினார். இதையொட்டி நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற ஆங்கிலத்  துறை 3ம் ஆண்டு மாணவி ஜென்சி கிளாடினாக்கு பரிசு வழங்கப்பட்டது. 2ம் ஆண்டு  தமிழ்த்துறை மாணவி சிவசக்தி தலைமையில் அனைவரும் விழிப்புணர்வு தின உறுதிமொழி ஏற்றனர். வணிகவியல் துறைத் தலைவர் கென்னடி வரவேற்றார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்  வேளாங்கண்ணி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இதில் விஏஓ ஹரிஹரன், கிராம உதவியாளர்கள் ஹரிநாராயணகண்ணன்,  பிரமநாயகம், ரவி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழ்த்துறைத் தலைவர் ரேச்சல்  மேனகா நன்றி கூறினார்.

Related Stories: