மன்னார்குடி, ஜன. 24: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெருகவாழ்ந்தான் ஊராட்சி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் சுமார் 8ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அண்மையில் பெய்த பரு வம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி அழுகி விட்டது. இதனால் மகசூல் கடுமையாக குறைந்தது. பெரிய அளவிலான பொருளாதார இழப்பீடு ஏற்பட்டதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கனமழையால் சேதமடைந்த சம்பா நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு கள ஆய்வு கூட செய்யவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர். இந்நிலையில், கனமழையால் சேதமடைந்த சம்பா பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், புதிதாக கணக்கெடுப்பு நடத்தி அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீதம் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து விதமான விவசாய கடன்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,