துணை இயக்குநர் ஆய்வு ரூபாய் நோட்டுகளில் நேதாஜி உருவபடம் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

கும்பகோணம், ஜன.24: ஆண்டுதோறும் சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை பாரத தேசத்தின் பராக்கிரம நாளாக இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் நகராட்சி வணிக வளாகத்தில் நகர பொதுச்செயலாளர் பாலாஜி தலைமையில் கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட சந்திரபோசின் படத்திற்கு இளைஞரணி மாநில செயலாளர் குருமூர்த்தி, ஆலய பாதுகாப்பு பிரிவு தலைவர் வைரவேல் மணிமொழி, மாவட்ட அமைப்பாளர் விஜய்பிரபு, மாவட்ட செயலாளர் அனபாயன், நகர இளைஞரணி தலைவர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மத்திய, மாநில அரசுகள் இந்தியாவின் தேசத் தந்தையாக நேதாஜி சுபாஷ் சந்திரபோசை அறிவிக்க வேண்டும். ரூபாய் நோட்டுகளில் நேதாஜியின் திருவுருவப் படத்தை அச்சிட்டு வெளியிட வேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்து இதுவரை வெளியிடப்படாத ஆவணங்களை உடனே வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: