கொள்ளிடம், ஜன. 24: கூத்தியம்பேட்டை கிராமத்தில் 20 ஆண்டுகளாக கைவிடப்பட்ட சாலையை மீண்டும் மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் வெட்டுமாகளம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் மிக குறுகிய வரப்பாக இருந்தது. 2000ம் ஆண்டில் கிராம மக்களின் கோரிக்கைய ஏற்று தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் சாலை அமைக்கப்பட்டது. அதன்பிறகு தார் சாலையாக மேம்படுத்தப்பட்டது. இதனால் இந்த சாலை வழியாக விவசாயிகள், தொழிலாளர்கள் அப்பகுதியில் உள்ள வெட்டுமா களத்துக்கும், அப்பகுதியில் உள்ள வயல் பகுதிகளுக்கும் எளிதில் சென்று வந்தனர்.