நீடாமங்கலம், ஜன.22: நீடாமங்கலம் ஒன்றியத்தில் நீரில் அழுகிய நெற்பயிர்களை பார்வையிட்டு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். நீடாமங்கலம் ஒன்றியம் வடுவூர் தென்பாதி, காட்டக்குடி, காரக்கோட்டை, செருமங்கலம், எடமேலையூர் மேற்கு, எடகீழயூர், புல்லவராயன் குடிகாடு ஊராட்சிகளில் கனமழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு தஞ்சை எம்பி., எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆறுதல் கூறினார். நிகழ்ச்சியில் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி.ராஜா, ஒன்றிய குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், தெற்கு ஒன்றிய செயலாளர் மாயவநாதன், ஒன்றிய துணை தலைவர் ஞானசேகரன், மன்னை ராஜபூபாலன், தொமுச வடுவூர் நீலமேகம், ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.