ஈரோடு, ஜன. 22: ஈரோட்டில் 1,442 மாணவ-மாணவிகளுக்கு ரூ.58.85 லட்சத்தில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளி, திணடல் அரசு மேல்நிலைப்பள்ளி, வீரப்பன்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சித்தோடு அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கலைமகள், செங்குந்தர் பள்ளிகளில் படிக்கும் 1,442 மாணவ-மாணவிகளுக்கு ரூ.58.85 லட்சத்தில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.