கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல் அனுமதியின்றி மது பானம் விற்றவர் கைது

கறம்பக்குடி, ஜன.22: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி குலந்திரான்பட்டு அருகே அனுமதியின்றி மது பானம் விற்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து எஸ்ஐ பிரகாஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குலந்திரான்பட்டு கிராமம் பூசாரி தெருவை சேர்ந்த விஸ்வலிங்கம் என்பவர் சட்ட விரோதமாக அனுமதியின்றி அவரது வீட்டிற்குள் மது பானம் விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: