சென்னை: இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 61 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
- முதல் அமைச்சர்
- மத்திய அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- ஜெய்ஷங்கர்
- இலங்கை கடற்படை
