தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி காவல் அதிகாரிகள், ஆட்சியர்கள் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை

 

சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி காவல் அதிகாரிகள், ஆட்சியர்கள் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக சந்தீப் ராய் ரதோரை நியமிக்க தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் மற்றும் மேற்கண்ட அதிகாரிகள் பணியில் சேருவது தொடர்பான இணக்க அறிக்கை 03.04.2026 அன்று காலை 11:00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் தயார்நிலையை ஆணையம் மாற்றம் செய்துள்ளது என்பதைத் தெரிவிக்குமாறு நான் பணிக்கப்பட்டுள்ளேன், மேலும் பின்வருமாறு உத்தரவிடுகிறது. மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், தேர்தல்கள் முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான எந்தப் பதவிகளிலும் நியமிக்கப்பட மாட்டார்கள்.

மதுரை காவல் ஆணையர் லோகநாதன் மாற்றப்பட்டு அப்பதவிக்கு
அபிஷேக் தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, சஞ்சய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல காவல்துறை ஐஜியாக ரம்யா பாரதியை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு. சேலம் ஆட்சியராக அருண் தம்புராஜ், தூத்துக்குடி ஆட்சியராக விஷ்ணு மகாஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Related Stories: