கத்திரிகோலால் குத்தி டிரைவர் கொலை

வாடிப்பட்டி, ஜன.22: வாடிப்பட்டி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கத்தரிகோலால் குத்தி டிரைவர் கொலை செய்யப்பட்டார். வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் மகன் ரெகுராஜ் (25). டிரைவர். இவருக்கும், கருப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் செவ்வாயன்று இரவு போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்தவர்கள் கத்திரிகோலால் ரெகுராஜை சரிமாரியாக குத்தினர். படுகாயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்

Related Stories: