வாடிப்பட்டி, ஜன.22: வாடிப்பட்டி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கத்தரிகோலால் குத்தி டிரைவர் கொலை செய்யப்பட்டார். வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் மகன் ரெகுராஜ் (25). டிரைவர். இவருக்கும், கருப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் செவ்வாயன்று இரவு போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.