திருப்புத்தூர், ஜன.20: திருப்புத்தூர் பகுதி வழியாக செல்லும் தேசிய நெஞ்சாலையின் ஐந்து ரோடு சந்திப்பு சாலையில் சோலார் விளக்குகள் அல்லது உயர் கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை திருப்புத்தூர் வழியாக செல்கிறது. இதில் பல முக்கிய ஊர்களுக்கு செல்லும் இணைப்பு ரோடுகள் உள்ளன. இதில் பெரும்பாலான இணைப்பு ரோடுகள் ஊருக்குள் செல்வதற்கு இரண்டு முதல் நான்கு கிலோ மீட்டருக்கு முன்னதாகவே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இணைப்பு ரோடு வருகிறது. இதில் இணைப்பு ரோடுகளின் சந்திப்புகளில் ஊரின் பெயர் பலகைகளும் இல்லை.
திருப்புத்தூர் தென்மாபட்டி அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு ரோட்டில் கண்டரமாணிக்கம், பட்டமங்கலம் ரோடு, வாணியங்காடு ரோடு, திருப்புத்தூர் ரோடு உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்லும் ரோடுகள் செல்கிறது. இந்த இடத்தில் ஐந்து ரோடுகள் பிரிகின்றன.