சிங்கம்புணரி, ஜன.20: நெல் அறுவடை செய்யாமல் உள்ளதால், நெல்மணிகள் முளைத்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சிங்கம்புணரி பகுதியில் கடந்த ஆண்டு ஆடி பட்டத்தில் இருந்து விவசாய பணிகளை விவசாயிகள் ஆர்வத்துடன் தொடங்கினர். மழை தாமதம் காரணமாக விவசாய பணிகள் சற்று தாமதமாகவே தொடங்கப்பட்டது. சிங்கம்புணரி, சூரக்குடி, பிரான்மலை, காளாப்பூர், வேங்கைபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. இந்நிலையில் மார்கழி மாத இறுதியில் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் மழை பெய்ததால் சிங்கம்புணரி பகுதியில் விவசாயம் செய்த விவசாயிகள் நெல் அறுவடை பணிகளை செய்ய முடியாமல் பெரும் அவதி அடைந்தனர்.