தொண்டி, ஜன.20: தொண்டியில் மணிமுத்து ஆற்றுப்பகுதி பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், கடலுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டியில் உள்ள மணிமுத்தாறு தண்ணீர் முழுவதும் எவ்வித தடையுமின்றி கடலுக்கு சென்றது. சில காலமாக இந்த ஆற்றின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் கன மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்கள் நிறம்பி விட்டது. இதனால் உடைப்பு ஏற்படும் முன்பு திறந்து விடுவதால் தண்ணீர் முழுவதும் கடலை நோக்கி வருகிறது.