நத்தம் வட்டத்தில் காலியாக உள்ள 4 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், ஜன. 20:நத்தம் வட்டத்தில் காலியாக உள்ள 4 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடம் உள்ள கிராமம், இடஒதுக்கீடு விபரங்கள் வருமாறு: சிறுகுடி கிராமம்- பிசி- பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம்கள் (முன்னுரிமை பெற்றவர்), புன்னப்பட்டி கிராமம்- எஸ்சி- ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்), பாப்பாபட்டி கிராமம்- எம்பிசி/ டிஎன்சி- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்), ஆவிச்சிபட்டி கிராமம்- பிசி- பிற்படுத்தப்பட்டோர் (பெண்கள் மட்டும்) (பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம்கள் நீங்கலாக) (முன்னுரிமையற்றவர்) பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 1.7.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், அதிகபட்சம் 35 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். காலியிடங்களுக்கு தகதியான நபர்கள் தேர்வு செய்யும்போது, பணியிடம் காலியாக உள்ள கிராமம் 2 கிமீ சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவிலும், தகுதியான நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலிபணியிடம் அமைந்துள்ள குறுவட்ட அளவில் மட்டுமே தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும். காலியாக உள்ள 4 கிராம உதவியாளர்கள் பணியிடத்திற்கு கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை வருகிற 25ம் தேதி மாலை 5 மணிக்குள் நத்தம் வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என நத்தம் வட்டாட்சியர் விஜயலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: