தூத்துக்குடி, ஜன. 20:மழைநீரை அகற்றக் கோரி தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் ஏற்கனவே பெய்த மழையால் வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்திருந்த நிலையில் கடந்த வாரம் 5 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுமார் 2500க்கும் மேற்பட்ட வீடுகள் தீவுகளாக மாறியுள்ளன. 250க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை காலி செய்துள்ளனர்.