சின்னமனூர், ஜன. 19: சின்னமனூரில் கால்வாயை அகலப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடந்து வரும் நிலையில், சாலையோரம் குவிக்கப்பட்ட மண்ணால் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. சின்னமனூரில் உள்ள தேனி ரோட்டில் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவிலிருந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளைவு வரை, சாலையோரக் கால்வாயை அகலப்படுத்தும் பணி அமை வேகத்தில் நடந்து வருகிறது.இப்பணிக்காக தோண்டிய மண்ணை சாலையோரமாக குவித்து வைத்துள்ளனர். இப்பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும், போக்குவரத்து மிகுந்த சாலையாகும்.