தனியார் வெடி மருந்து கிடங்குகளில் ஆர்டிஓ ஆய்வு

பாப்பிரெட்டிபட்டி, மே 11: தர்மபுரி மாவட்டம், அரூர் கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியார் வெடிமருந்து கிடங்குகள் மற்றும் மொத்த பட்டாசு, வான வேடிக்கை வெடிகள் விற்பனை மையங்களில் நேற்று அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பாப்பிரெட்டிப்பட்டி, வட்டம் பொம்மிடி உள் வட்டத்திற்குட்பட்டவாசி கவுண்டனூர் கிராமத்தில், அமைந்துள்ள வெடி மருந்து கிடங்கு, கதிரிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வெடி மருந்து கிடங்கு ஆகியவற்றை ஆய்வு செய்து தணிக்கை மேற்க்கொண்ட கோட்டாட்சியர் பாதுகாப்பான முறையில் வெடி மருந்துகள் விநியோகம் மேற்கொள்ளவும், காலை நேரங்களில் மட்டுமே வெளி மருந்து விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தீத் தடுப்பு நடவடிக்கைகளில் மேம்படுத்தப்பட்ட நிலை இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தொடர்ந்து பொம்மிடி கிராமத்தில் அமையப் பெற்றுள்ள மொத்த பட்டாசு இருப்பு கிடங்கில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இங்கு சரியான முறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், இங்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு தீத்தடுப்பு சாதனங்கள் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

The post தனியார் வெடி மருந்து கிடங்குகளில் ஆர்டிஓ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: