டூவீலர்கள் மோதி பழ வியாபாரி பலி

பாலக்கோடு, மே 11: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மைதீன்நகரை சேர்ந்தவர் அயுப் (55). இவர் பாலக்கோடு பைபாஸ் சாலையில், பழக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில், அயுப் டீ குடிப்பதற்காக கடையில் இருந்து மொபட்டில் சாலையை கடக்க முயன்றார். அப்போது பாலக்கோடு அருகே கொட்டாப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், அயுப் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனக்கு கொண்டு சென்றனர். அஙங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அயுப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் பலத்த காயமடைந்த சிறுவனை தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்த பாலக்கோடு போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர்கள் மோதி பழ வியாபாரி பலி appeared first on Dinakaran.

Related Stories: