இளம்பெண் தற்கொலை

போடி, ஜன. 19: போடியில் உள்ள சுப்புராஜ் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா (60). இவரது மகள் நந்தினி (21), பிஎஸ்சி கணினி அறிவியல் பட்டதாரி. இவர், கடந்த 5 மாதமாக வேலை தேடி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நந்தினிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை தேடியுள்ளனர். இதையறிந்த அவர், இப்போது திருமணம் வேண்டாம் என பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால், குடும்பத்தினர் கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த நந்தினி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்தார். போடி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: