அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

பாபநாசம், ஜன. 19: அய்யம்பேட்டை சிறப்பு காவல் ஆய்வாளர் முருக தாஸ் உள்ளிட்டப் போலீசார் அய்யம் பேட்டை அடுத்த மாத்தூர் குடமுருட்டி ஆற்றின் கரையில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து சோதனை மேற் கொண்டனர். இதில் அரசின் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது . போலீசார் வழக்குப் பதிந்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். இதேப் போன்று அய்யம்பேட்டை அடுத்த பசுபதி கோயில் பகுதியில் ரோந்துச் சென்ற சிறப்பு காவல் ஆய்வாளர் செந்தில் உள்ளிட்ட ப் போலீசார் அவ் வழியாக அரசின் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

Related Stories: