திருவெறும்பூர், ஜன. 17: திருவெறும்பூர் அருகே உள்ள தேனீர்பட்டி பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் சம்பா ஒரு போக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததோடு நெல்மணிகள் முளைக்க துவங்கியுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் முறையாக வந்து விசாரித்து நிவாரணம் பெற்று தருவதற்கு உரிய கணக்கெடுப்பு எடுக்கவில்லையென அப்பகுதி விவசாயிகள் நெப்போலியன் தலைமையில் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.