திருமங்கலம் ஜிஹெச்சில் கொரோனா தடுப்பூசி

திருமங்கலம், ஜன. 17:  திருமங்கலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை தலைமை மருத்துவர் பூமிநாதன் துவக்கி வைத்தார். மருத்துவமனை ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு முதற்கட்டமாக இந்த தடுப்பூசி போடப்பட்டது. நிகழ்ச்சியில் செக்காணூரணி ஆரம்ப சுகதாரத்துறை வட்டார மருத்துவ அலுவலர் உமாமகேஸ்வரி, மாவட்ட பயிற்சிகுழு மருத்துவ அலுவலர் சந்துரு, சுகாதார ஆய்வாளர் பழனி மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: