சோழவந்தான், ஜன. 17: சோழவந்தானில் வாடிப்பட்டி ரோடு வைகை குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு தலைவர் முத்துவேல் தலைமை வகித்தார்.செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் பழனி வரவேற்றார். இதையடுத்து பல்வேறு விளையாட்டு போட்டிகள், கோல போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை சிறுவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் வசந்தி,பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு,எம்.வி.எம்.கலைவாணி பள்ளி தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன், பேரூர் செயலாளர் கொரியர் கணேசன் மற்றும் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.