திண்டுக்கல், ஜன. 17: திண்டுக்கல் அருகே சிறுமலை பகுதியில் பழையூர், வேளாம்பண்ணை, தாளக்கடை, கடமான்குளம், அகஸ்தியர்புரம், தென்மலை, புதூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன இக்கிராமங்களில் சாலை வசதி கிடையாது. இங்கு வாழை, எலுமிச்சை, சவ்சவ், அவரை, காப்பி, ஏலக்காய் போன்றவற்றை பயிர் செய்கின்றனர். மலைப்பகுதியில் விளையும் காய்கறி உள்ளிட்ட விளை பொருட்களை ஊர்களுக்கு கொண்டு செல்ல குதிரைகளை பயன்படுத்துகின்றனர். இதனால், ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு குதிரையாவது இருக்கும். பின்பு கிராமங்களிலிருந்து வாகனங்கள் மற்றும் பேருந்து மூலமாக திண்டுக்கல்லிற்கு கொண்டு வந்து விற்பனை செய்வர்.