திருவள்ளூர்: திருவள்ளூரில் வருவாய் கிராம ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சங்க மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். விழாவில் தாசில்தார் செந்தில்குமார் கலந்து கொண்டு பொங்கல் வைத்தார். இதில் நிர்வாகிகள் வேணு, ரமேஷ்பாபு, அருள், சந்திரசேகர், சத்தியநாராயணன், சாமிநாதன், சீனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.