காரைக்குடி, ஜன.13: காரைக்குடியில் பாதாளச்சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள், வணிகர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை பணிகள் முடியாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை அப்படியே போட்டுள்ளனர். மக்கள் பள்ளங்களில் விழுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக பாதாள சாக்கடை பணியால் சாலைகள் சேறும் சகதியாக காட்சியளிக்கின்றன. இதனை மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.