ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறை மதுரை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி ராஜராஜேஸ்வரம் தலைமை தாங்கினார். மாவட்ட பொறியாளர் வெங்கடேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நெடுஞ்சாலை துறையில் சாலை ஆய்வாளர் பணியிடத்தை திறன்மிகு உதவியாளர் என பெயர் மாற்றம் செய்ததைப்போல, சாலை பணியாளர் பணி இடத்தை திறன்மிகு இல்லா பணியாளர் என பெயர் மாற்றம் செய்து, அதற்குரிய ஊதியம் நிர்ணயித்திட வேண்டும்.  நெடுஞ்சாலை துறையில் சாலை பணியாளர் பணியிடத்தை நிரந்தர அரசு ஊழியர் பணியிட வரிசையில் சேர்த்து கருவூலகம் மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: