அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் புறநிலை ஊழியர் சங்கம் ஆகியவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சாத்தியமற்ற இலக்கு நிர்ணயம், ஆணவம், அத்துமீறல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளை கண்டித்து மதுரை தல்லாகுளம் தலைமை அலுவலகம் முன்பு அஞ்சல் ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில நிர்வாகிகள் வீரமணி, கண்ணன், தன்ராஜ், கோட்ட செயலாளர்கள் முருகன், நாராயணன், கன்வீனர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: